Friday, May 18, 2007

தினமும் உன் மடி மீது
உறங்க ஆசை தான்... முடிவதில்லை!!
எங்கே என் உறக்கத்தில்
உன்னை பிரிந்து விடுவேனொ என்று..!!!

தினமும் உன் கை கொர்த்து
நடக்க ஆசை தான்... முடிவதில்லை!!
எங்கே என் கண்ணீரை துடைக்க
உன் கைகள் இல்லாமல் போய் விடுமோ என்று..!!

தினமும் உன் கண் பார்த்து
சிரிக்க ஆசை தான்... முடிவதில்லை!!
எங்கே என் கனவுகள்
காற்றோடு கலந்து விடுமோ என்று..!!

தினமும் உன்னோடு இருக்க ஆசை தான்...
முடிவதில்லை!!!
எங்கே என் மனம்
மரணத்தை வென்று விடுமோ என்று..!!

சொல்லவுமில்லை... சொல்ல போவதுமில்லை...
என் கனவுகளில் நீ வந்ததை...
சொன்னால் புரியாமல் பொய் விடுமோ என்று..!!

தெரியவுமில்லை.. விளங்கவுமில்லை...
நான் என்ன ஆவேன் என்று...!!!

(எங்கோ எதிலோ படித்தது.)

1 comment:

Arunkumar said...

sutta pazham as usual super kavitha.. :)