Sunday, March 18, 2007

தொடருவோம் தோழமையை....

சில கவிதையின்
கடைசி வரியில்
ஒட்டியிருக்கும்
உயிரைப்போல
எதை எதையோ
பிதற்றிய
உன் கடிதத்தின்
இறுதிவரி சொன்னது
என்னை- நீ
நேசிப்பதாய்!

கடிதம் எழுதக்கூட
வார்த்தை
கடன் வாங்கியிருந்தாயா?
எந்தச் சொல்லிலும்
உன்
சொந்த உணர்வுகளில்லை.

பூக்களுக்கு
முலாம் பூசுவதுமாதிரி
இதயத்தில்
பொறுந்தவேயில்லையடா
உன் கடிதம்.

எப்போதுமே
மதிக்கிறேன்
உன் அறிவுத் திறமையை

எப்போதும்
கடமைப்பட்டிருக்கிறேன்
நீ செய்த உதவிகளுக்கு.

நீ என்னைச் செதுக்கினாய்
அந்த உரசலில்
ஒருபோதும்
என்னுள்
தீ மூண்டதில்லை.

தெரிந்துகொள் தோழனே
இது தோழமை.

ஆத்மாவை
அலங்கரித்துக் கொடுத்த
உன்னோடு
உடை களையும் உறவு
கொச்சையாகும்.

அதனால்
மறுப்பதற்கு மன்னிக்கவும்.

நண்பனே
நட்புஸ்தானம் பெற்று
உடனே வா
தொடருவோம் தோழமையை.......

(எங்கோ எதிலோ படித்தது.)

5 comments:

Raji said...

Nalla irukku...
Idhu maadhiri yengo padithadhai engal kan munae niruthvadharkku nandri...

Idhae maadhiri neraya poda vazhththukkal:)

Dreamzz said...

கவித சூப்பர்ங்க!

Dreamzz said...

//நண்பனே
நட்புஸ்தானம் பெற்று
உடனே வா
தொடருவோம் தோழமையை....... /
ஆஹா! நல்ல முடிவு! :)


ஜுட்ட ஜவிதனாலும் நல்ல கவிதையா போட்டு இருக்கீங்க! :) thanksnga!

Arunkumar said...

idha naan eppidi miss pannen.. super kavithai

Unknown said...

superda